போதைப் பொருட்களை ஒழிக்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட பா.ம.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-30 15:40 GMT

தமிழகத்தில் அனைத்து வகை போதைப் பொருட்களையும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி மாவட்ட பா.ம.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஹரிதாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்