மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
குலசேகரன்பட்டினத்தில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் உடன்குடி பஸ்நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது உடன்குடி சிவலூரை சேர்ந்த சேகர் பாண்டி மகன் செந்தில்குமார் (வயது 35) என்பவர் அரசு அனுமதி இன்றி விற்பனைக்காக 26 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.6750-ஐயும் பறிமுதல் செய்தனர்.