வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பள்ளிப்பட்டு அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-23 12:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் பழைய காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று ஊர் சுற்றிவிட்டு வந்த மகனை வேலைக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறாயே என கேட்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சஞ்சய் தனது அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பால் போட்டுக்கொண்டார். பின்னர், நீண்ட நேரமாகியும் அறைக்குள் இருந்த சஞ்சய் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவைத் தட்டி பார்த்தனர்.

அதன் பிறகு கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தபோது, அவர் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு கதறி அழுதனர். உடனே அவரது உடலை கீழே இறக்கி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிப்பட்டு போலீசார் சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45). திருமணமான இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்த வயிற்றுவலி காரணமாக வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்