வாலிபர் தற்கொலை

விளாத்திகுளத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-11 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பங்களா தெருவை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் புதியராஜ் (வயது 38). இவர் அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார் தற்போது நிரந்தரமான வேலை இல்லை என்று மனைவி முத்துலட்சுமியிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள மாடியில் புதியராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்