வாலிபர் தற்கொலை

சிவகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-08 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்த காசி மகன் முகேஷ் (வயது 21). பொக்லைன் வாகனத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வருட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முகேஷ் தனது வீட்டின் அருகில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு சென்று வீட்டின் உத்திரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்