வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-08 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மகன் லிங்கராஜ் (வயது 22). இவர் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தசரா திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று காலை ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள சுடுகாட்டு பகுதியில் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். லிங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்