திருவள்ளூரில் கொட்டும் மழையில் அமைக்கப்படும் தார் சாலை: மக்கள் அதிருப்தி

தேங்கி நிற்கும் தண்ணீரில் தார் சாலை அமைக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Update: 2024-08-11 14:18 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.

இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் சாலையை அமைத்துக்கொண்டு இருந்தனர். தேங்கி நிற்கும் தண்ணீரில் கெமிக்கலை கலந்து விட்டு தார் சாலை அமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்