ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டியில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2022-12-18 00:15 IST
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம்:

நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டியில் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி

இதேபோல நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயருக்கும், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள 16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் சிங்காரவேலு, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர

Tags:    

மேலும் செய்திகள்