பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-05-20 18:46 GMT

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் வைகாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் தோட்டக்குறிச்சியில் உள்ள சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மாலைகள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்