ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

சமயநல்லூரில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-13 19:58 GMT

வாடிப்பட்டி,

சமயநல்லூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48). ஆட்டோ டிரைவர். ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன்(21), வைகைநகர் ஈஸ்வரன் மகன் ராஜ்குமார்(19), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் பாலமுருகன் குடியிருக்கும் வீட்டருகில் உள்ள அரசு பள்ளி முன்பு தினமும் வந்து பிரச்சினை செய்து வந்தனர். அதை பலமுறை பாலமுருகன் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதேபோல் பாலமுருகனுக்கும் இவர்கள் 3 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் பாலமுருகனை பிடித்துக்கொள்ள கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்