மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-07-08 04:11 GMT

ராமேஸ்வரம்,

மீன்களுக்கு போதிய விலையை நிர்ணயம் செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் 700 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைத்துள்ளனர்.

இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்