திருமருகல் பகுதியில் 2-வது நாளாக மழை

திருமருகல் பகுதியில் 2-வது நாளாக மழை பெய்தது.

Update: 2023-09-08 19:15 GMT

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு பரவலாக மழை பெய்தது. அதேபோல நேற்று முன்தினம் இரவு (7-ந் தேதி) தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், திருப்புகலூர், வவ்வாலடி, ஆலத்தூர், குத்தாலம், எரவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணிநேரம் மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்