முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2022-12-06 13:48 GMT

சென்னை,

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அர்ஜூனா விருது வென்ற பிரக்ஞானந்தா முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை  இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்