அக்டோபர் 30ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

அக்டோபர் 30ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைகப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Update: 2022-09-09 12:21 GMT

சென்னை,

தமிழகத்தில் துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25),மற்றும் 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்.30-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 30ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்