பா.ம.க. செயற்குழு கூட்டம்

செங்கோட்டையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-17 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தில் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமபாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரிகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் சிங்கராயன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் சுசிசுந்தர், மாவட்ட தலைவர்கள் குலாம், வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் திருவேங்கடம் அருகே உள்ள மகேந்திரவாடி வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. ஒன்றிய நிர்வாகி மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். கேரளாவிற்கு கனிமவளங்களை கொண்டு செல்வதை கண்டித்து வருகிற 5-ந் தேதி புளியரையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கிருஷ்ணன், பால் நேரு என்ற கண்ணன், சதீஷ், ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட துணை தலைவர் மகாதேவன், தென்காசி மத்திய மாணவிகள் படைத்தலைவி மானசா, பாட்டாளி தொழிற்சங்க மத்திய மாவட்ட தலைவர் முருகன், சமூக நீதி பேரவை செயலாளர் முத்துகுமார், செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் அபு அண்ணாவி, செங்கோட்டை நகர தலைவர் செண்பககுமார், ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் சாமுவேல், சிவன் ராஜ், ஜான் கென்னடி, சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்