'முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-30 12:31 GMT

விழுப்புரம்,

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 222 பேர் டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த மாத இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்