ஆன்மிகத்தில் கோபுர உச்சிகளையும், விளையாட்டு வளர்ச்சியில் உலக சாதனைகளையும் படைத்தவர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார்: அன்புமணி புகழாரம்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2023-09-24 10:20 GMT

சென்னை,

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 88-வது பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"ஆன்மிகத்தில் கோபுர உச்சிகளையும், விளையாட்டு வளர்ச்சியில் உலக சாதனைகளையும் படைத்தவர் சிவந்தி ஆதித்தனார்!!

இதழியலாளர், ஆன்மிகவாதி, விளையாட்டு அமைப்பின் தலைவர், கொடையாளர் என பன்முகங்களைக் கொண்ட தினத்தந்தி குழுமத்தின் மறைந்த அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆன்மிகத்தை வளர்ப்பதில் கோபுரங்களின் உச்சிகளையும், விளையாட்டுத்துறை வளர்ச்சியில் உலக சாதனைகளையும் படைத்தவர் ஆதித்தனார். அவரது சிறப்புகளையும், பெருமைகளையும் இந்த நாளில் போற்றுவோம்!" இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்