பேய்க்குளம் அருகே தூக்கு போட்டுபெண் தற்கொலை

பேய்க்குளம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-23 18:45 GMT

தட்டார்மடம்:

பேய்க்குளம் அருகே அருளூர் வடக்கு தெருவைச் சேர்ந்தசெல்வசிங் மனைவி அண்ணாஆரவல்லி (வயது 42). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து செல்வசிங் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்