மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.

Update: 2023-06-21 19:13 GMT

முக்கூடல்:

வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர் முக்கூடல் டாஸ்மாக் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 20-ந்தேதி முருகன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்தார். வேலை முடிந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன், முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தென்திருப்புவனத்தை சேர்ந்த தங்கவேல் (30) என்பவர் முருகனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்