பால்குட ஊர்வலம்

சங்கரன்கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-30 19:59 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான முப்பிடாதி அம்மன் கோவிலில் 56-ம் ஆண்டு பாலாபிஷேகம், சந்தன அபிஷேக விழா, சங்கரன்கோவில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவில் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் செய்யது அலி, துணை செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், மற்றும் கண்ணையா, எம்எஸ்கே கருப்பசாமி, சுப்பிரமணியன், வேல்சாமி, முருகன், மூர்த்தி, முத்துக்குமார், நாராயணன், முத்துசாமி, கருப்பசாமி, முப்பிடாதி, பாலசுப்ரமணியன், துரைராஜ், ஜெகநாதன், குருசாமி, ரவிச்சந்திரன், பரமசிவம், இசக்கி ராஜன், சின்னபாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்