மார்கழி மாத உற்சவ விழா

ஆண்டிப்பட்டி சக்கம்பட்டி பகுதியில் உள்ள நன்மை தருவார் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.

Update: 2022-12-18 19:00 GMT

ஆண்டிப்பட்டி சக்கம்பட்டி பகுதியில் தேனி - மதுரை சாலையில் நன்மை தருவார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சாமி, 49 அடி உயரமுள்ள மாகாளியம்மன் சிலை கொண்ட சாமி சன்னதி உள்பட 21 சாமி சன்னதிகள் உள்ளன. கோவிலில் 19-ம் ஆண்டு மார்கழி மாத உற்சவ விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் வருகிற 27-ந்தேதி அய்யப்ப சாமிக்கு 1,008 விளக்கு பூஜை, அம்மன் கரகம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம், அய்யப்ப சாமி ஊர்வலம் நடைபெறுகிறது. 28-ந்தேதி அக்னி சட்டி எடுத்து வருதல், மாகாளியம்மனுக்கு 108 குட பாலாபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா மற்றும் அய்யப்ப சாமிக்கு 18-ம் படி பூஜை நடக்கிறது. வருகிற ஜனவரி 14-ந்தேதி மாலை டி.சுப்புலாபுரம் நாழிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகி முத்து வன்னியன், விழா கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்