ஸ்கூட்டரில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

ஸ்கூட்டரில் சாராயம் கடத்திய வாலிபர் கைது

Update: 2023-04-06 19:15 GMT

கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாரதிராஜா (வயது25) என்பதும், காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்து, 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்