ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்துக்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அமிர்த ஜோதி அறிவிப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2022-08-28 07:38 GMT

ஓணம் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் 8-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ந் தேதி (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை நாளான 8-ந் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்