லாரி மோதி விவசாயி பலி

லாரி மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-06-01 18:20 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே நல்லதங்காள் பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 56). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் உர மூட்டையை எடுத்துக்கொண்டு கிள்ளுக்கோட்டை செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நார்த்தாமலை சமத்துவபுரத்தை சேர்ந்த பாண்டி (50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்