அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

அரசு பஸ் மோதி பெண் படுகாயம் அடைந்தார்

Update: 2022-08-28 17:57 GMT

இளையான்குடி,

இளையான்குடி பஜாரில் ஆர்.எஸ்.மங்கலம்- பரமக்குடி செல்லும் அரசு பஸ் பழக்கடையில் மோதி நின்றது. அப்போது அங்கு நின்று இருந்த சீத்தூரணி கிராமத்தை சேர்ந்த ராமு மனைவி தனம் (வயது45) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டேசுவரர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்