அரசுப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

திட்டச்சேரி அரசுப்பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

Update: 2022-11-28 18:45 GMT

திட்டச்சேரி:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் ஆனந்தி, கணித ஆசிரியர்கள் ரவிக்குமார், ஜெயந்தி ஆகியோர் வானவில் மன்றம் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுல்தான் ரித்தாவுதீன், மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் புகழேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்