தமிழகத்தின் 15 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.;

Update:2024-05-05 20:51 IST
தமிழகத்தின் 15 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 15 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110.84 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்;

* சென்னை

* கோவை

* கடலூர்

* தருமபுரி

* ஈரோடு

* கரூர்

* மதுரை விமான நிலையம்

* மதுரை நகரம்

* நாகப்பட்டினம்

* பாளையங்கோட்டை

* தஞ்சாவூர்

* திருப்பத்தூர்

* திருச்சிராப்பள்ளி

* திருத்தணி

* வேலூர்

 

Tags:    

மேலும் செய்திகள்