அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லையில் அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-09-23 22:27 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, அரசு ஊழியர்களிடம் மனுக்களை பெற்று, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 46 மனுக்கள், வருவாய்த்துறை சார்பில் 28 மனுக்கள், பேரூராட்சி சார்பில் 7 மனுக்கள் என மொத்தம் 81 அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர்கள் மகேசுவரன் (பொது), ஜான் கென்னடி (வளர்ச்சி), அலுவலக பொது மேலாளர் வெங்கடாச்சலம், வளர்ச்சி பிரிவு மேலாளர் பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்