அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.;
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படவில்லை, கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய போது 6 மாதத்திற்குள் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும் என்றும், ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் பணி பாதுகாப்புக்கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.