பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பாவூர்சத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-26 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் மோயீசன் அடிகளார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராம.உதயசூரியன், துணை சேர்மன் முத்துகுமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அருள்பிரதீப் வரவேற்றார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை ஆகியோர் பங்கேற்று சைக்கிள்களை வழங்கினர். மொத்தம் 431 மாணவ- மாணவிகளில் முதற்கட்டமாக 229 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், முன்னாள் தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் கே.பி.குமார்பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர்.பால்துரை, எம்.பி.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்