மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-08-18 19:08 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் உலகன்குளம் பஞ்சாயத்து பூதத்தான்குடியிருப்பு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மூலச்சி சீவலமுத்துக்குமார், துணைத்தலைவர் சைலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்