புதிய ரேஷன் கடைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா; நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தென்பத்து, துலுக்கர்குளம் உள்பட 5 இடங்களில் புதிய ரேஷன் கடைகளுக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-05-20 19:13 GMT

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்பத்து, சொக்கட்டான்தோப்பு, துலுக்கர்குளம், புதூர், பிள்ளையார்குளம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், பா.ஜனதா பொதுச்செயலாளர் முத்து பலவேசம், தமிழர் விடுதலை களம் முத்துக்குமார், மானூர் ஒன்றிய 10-வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மாரிமுத்து (தென்பத்து), புஷ்பா மகேந்திரன் (துலுக்கர்குளம்), பார்வதி மலையப்பன் (புதூர்), சுரேஷ் (பிள்ளையார்குளம்), காளிதாஸ், சண்முகசுந்தரம், லட்சுமணப்பெருமாள், பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்