தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது.

Update: 2022-08-04 17:39 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனூர் ஊராட்சி கைலாச சமுத்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர். நேற்று சுப்பிரமணி மகள் நந்தினி ஈஸ்வரி வீட்டின் அருகில் உள்ள சமையல் கூரைக்கொட்டகையில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கொட்டகையில் தீப்பிடித்து அருகே உள்ள வீட்டிலும் தீ பரவி வீட்டில் உள்ள பீரோ, கட்டில், நாற்காலி மற்றும் தளவாட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்