பிரபல ரவுடி வெட்டிக்கொலை

பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-09-09 19:36 GMT

கீழப்பழுவூர்:

பிரபல ரவுடி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூச்சி என்ற சுதாகர் (வயது 41). பிரபல ரவுடியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் பாஸ்கர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பாஸ்கர் மற்றும் கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்த முருகனின் மகன் அர்ஜூன்ராஜ் ஆகியோர், சுதாகர் வீட்டின் வெளியே நின்றபடி தகாத வார்த்தையால் பேசி, அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

வெட்டிக்கொலை

ஆனால் வீட்டிற்குள் இருந்த சுதாகர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த பாஸ்கரும், அர்ஜூன்ராஜும் வீட்டின் முன் பகுதியில் இருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து தனது குடும்பத்தினரை வீட்டிற்கு உள்ளே வைத்து பூட்டிவிட்டு சுதாகர் வெளியே வந்தார். அப்போது சுதாகர் மீது மிளகாய் பொடியை வீசி, அவரை பாஸ்கரும், அர்ஜூன்ராஜும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்பிரபல ரவுடி வெட்டிக்கொலைதிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை இழுத்து வந்து சாலையில் போட்டுவிட்டு, 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாஸ்கர், அர்ஜூன்ராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்