நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது

Update: 2023-08-23 19:30 GMT

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சிவாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே புதியதாக தொடங்கப்பட்ட நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடையில் உள்ள தங்க நகைகளை ஆய்வு செய்தபோது 10 கிராம் நகை இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையின் நிர்வாகத்தினர் விசாரணை நடத்தியதில், கடையில் பணியாற்றும் விற்பனையாளர் கார்த்திக் அதனை திருடி 5 ரோட்டில் உள்ள மற்றொரு நகைக்கடையில் அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி நகைக்கடையின் மேலாளர் சரவணன் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்