தவறி விழுந்த போலீஸ் ஏட்டு சாவு

திண்டுக்கல் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-09 16:42 GMT

திண்டுக்கல் அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 69). இவர், திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 5-ந்தேதி இவர், மாலப்பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சுப்புராம் பட்டறை அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த தோட்டனூத்தை சேர்ந்த சுமதி (53) மீது, சுப்பையா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பையா மற்றும் சுமதி படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சுப்பையா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்