திண்டுக்கல்லில் தனியார் செல்போன் டவரில் தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராட்டம்...!

சின்னாளபட்டி குடியிருப்பு பகுதியில் இருந்து தனியார் செல்போன் டவரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

Update: 2022-09-15 12:04 GMT

சின்னாளப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கனரா வங்கி அருகில் குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அருகே செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இந்த ஜெனரேட்டர் அதிக மின்னழுத்தம் ஏற்ப்பட்டதால் தீ பற்றி எரிய தொடங்கியது. அதிகளவு மின் ஒயர்கள் உள்ளதால் தீ ஓயர்களில் பரவி மளமளவென சுமார் 15 அடி தூரத்துக்கு கரும் புகையோடு எரிந்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குடியிருந்த பொது மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். தீயில் அருகில் இருந்த மாடி வீட்டிற்கு செல்லும் தண்ணீர் குழாயில் தீ பட்டு குழாய் எரிந்ததால் குழாய் உடைந்து அதிலிருந்து பீச்சியடிக்கப்பட்ட தண்ணீர் ஒரு பகுதியில் எரிந்த தீயினை அணைத்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்