படுகர் இன மக்களின் தெவ்வ ஹப்பா பண்டிகை

கோத்தகிரி தாந்தநாட்டில் படுகர் இன மக்கள் தெவ்வ ஹப்பா பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2023-07-18 22:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தாந்தநாட்டில் படுகர் இன மக்கள் தெவ்வ ஹப்பா பண்டிகையை கொண்டாடினர்.

பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் தங்களது பாரம்பரிய பண்டிககைகளை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் குலதெய்வமான தெவ்வ ஹப்பா (ஹிரியோடையா) பண்டிகை கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பனகுடியில் (வனக்கோவில்) பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கிராமத்தில் உள்ள ஹிரியோடையா கோவிலில் மண்டெ தண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் வெளியூர்களில் இருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணம் செய்து வந்து முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள், தங்களது பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் கலாசார உடை அணிந்து, தங்களது குழந்தைகளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

நேர்த்திக்கடன்

பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மண்டெ தண்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தாந்தநாடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்