திருச்செந்தூர் கடற்கரையில் 5 சவரன் தங்க செயினை தவறவிட்ட பக்தர் - தேடி கண்டுபிடித்த கடல் பாதுகாப்பு குழுவினர்

திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க செயினை கடல் பாதுகாப்பு குழுவினர் தேடி தந்தனர்.

Update: 2024-06-23 13:24 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புனித நீராடும்போது பெண் ஒருவர் தனது 5 சவரன் தங்க செயினை தவறவிட்டார். இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு குழுவினரை வரவழைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து தேடிய நிலையில், கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் அந்த செயினை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் தங்க செயினை திருப்பி கொடுத்தனர். தங்க செயினை கண்டுபிடித்து கொடுத்த குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்