வளர்ச்சி திட்ட பணிகள்

சாத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-10 19:56 GMT

சாத்தூர், 

சாத்தூர் ஒத்தையால் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள செங்குத்து உறிஞ்சுக்குழி, ஓ.மேட்டுப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணி உள்ளிபட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்