துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளார்.

Update: 2024-09-29 04:00 GMT

சென்னை,

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது;

உதயநிதியை பதவியேற்க வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களை திமுக வற்புறுத்தியுள்ளது. தந்தை முதல் அமைச்சர், மகன் துணை முதல் அமைச்சர் என்றால், இங்கு எங்கே ஜனநாயகம் இருக்கிறது. இது ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது. முடியாட்சியை நோக்கி திமுக எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது.

திமுக வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். உதயநிதியை விட மூத்த அமைச்சர்கள் பல பேர் கட்சியில் உள்ளனர். அவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி கொடுத்து இருக்கலாம். கலைஞரின் பேரன் என்பதற்காக, மு.க.ஸ்டாலினின் மகன் என்பதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமூக நீதி, சம வாய்ப்பு என்று அடிக்கடி கூறுகிறீர்கள். எங்கே சென்றது சமூக நீதி. ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு அவசர அவசரமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். இது தவறான உதாரணம், தமிழக அரசியலில் இது நல்லதல்ல." என்று அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்