குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

காட்பாடி காந்திநகரில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-15 17:37 GMT

காட்பாடி 14-வது வார்டு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மாநகராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காந்திநகர் கல்யாண மண்டபம் அருகில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் கே.ரெங்கநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.கண்மணி முன்னிலை வகித்தார். செயலாளர் எ.கணேஷ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சாலை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும். கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் நாய்கள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்