மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

நாகரசம்பட்டி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-10-15 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

பர்கூர் தாலுகா சிவம்பட்டி அருகே உள்ள நாடார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த செந்திலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செந்தில் இறந்து விட்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்