மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-10-14 19:30 GMT

கிருஷ்ணகிரி:

திருப்பத்தூர் மாவட்டம் சென்னகிருஷ்ணனூரை சேர்ந்தவர் திருமலை (வயது 20). இவர், தனது நண்பர்கள் ஸ்ரீதர் (20), புவியரசன் (19) ஆகியோருடன் கடந்த, 12-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றர். மோட்டார் சைக்கிளை திருமலை ஓட்டினார். அப்போது திருப்பத்தூர்- சிங்காரப்பேட்டை சாலையில் படத்தனூர் அண்ணா நகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன் புவியரசன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமலை லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்