ரூ.55 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே 2,125 பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனது.

Update: 2022-12-26 18:56 GMT

ராசிபுரம்

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் உள்ளது. இங்கு நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ரூ.55 லட்சம்

நேற்று நடந்த இந்த ஏலத்தில் 2,125 பருத்தி மூட்டைகள் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 2,107 மூட்டைகளும், கொட்டு பருத்தி 18 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 719-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 136-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 295-க்கும் ஏலம் நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்