தொடர் விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டன.

Update: 2024-08-15 06:37 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை. நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுக்கும்பட்சத்தில், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்துவிடுகிறது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்நிலையில் தொடர் விடுமுறை எதிரொலியாக விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி

* சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்-ரூ.4,301 ஆகும். ஆனால் நேற்றும், இன்றும் கட்டணம் ரூ.10 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063. நேற்றும், இன்றும் கட்டணம் ரூ.11 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,382 ஆக இருந்த கட்டணம் ரூ.7,192 ஆகவும்,

* சென்னை- கோவைக்கு ரூ.3,369 ஆக இருந்தது, ரூ.5,349 ஆகவும்,

* சென்னை- சேலத்துக்கு ரூ.2,715 ஆக இருந்த கட்டணம் ரூ.8,277 ஆகவும் அசுர வேகத்தில் உயர்ந்து உள்ளன.

இருந்தபோதும், கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்