கல்லூரி மாணவர் 'திடீர்' சாவு

கல்லூரி மாணவர் ‘திடீர்’ சாவு

Update: 2023-04-30 20:37 GMT

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டலை சேர்ந்தவர் தம்பிராஜா. இவருடைய மகன் அஜித் (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களாக ஒரு காலில் வலி இருந்ததால் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை பெற்றோர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தநிலையில் நேற்று அதிகாலையில் அஜித் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்