சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-08-07 01:16 GMT

கோப்புப்படம்

சென்னை,

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மேலும், வேலூரில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை சென்டிரல் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்