'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டம்: பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டி

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 14:36 GMT

சென்னை,

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பிற்கிணங்க 2022-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்பெறுவதுடன், முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவர்.

சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 09.07.2024 அன்று சென்னை, அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பெறுவர்.

போட்டிகளுக்கான தலைப்புகள் : 

கட்டுரை :- ஆட்சிமொழி தமிழ்

பேச்சு : - 1.குமரி தந்தை மார்சல் நேசமணி

                 2.தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா

                 3.முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்