தர்மபுரி:
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் பென்னாகரம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கி கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த முதியவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரின் உடலை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.